என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 17 July 2013

இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம்!!!

*ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம்.
-ரமணர்

Thursday, 11 July 2013



* "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.
* "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.
* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.
* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.
- ரமணர்

Thursday, 4 July 2013

பகவான் ரமணரின் அருள் விருந்து!!!


எல்லாம் கடவுள் செயல்

அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்..