என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 13 November 2013

கடவுளிடம் பாரபட்சம் இல்லை


இவ்வுலகில் உள்ள இன்பங்கள் அனைத்தும் அழியக்கூடியவை. எல்லா இன்பங்களும்
இறுதியில் துன்பத்தையே தரும். இவையெல்லாம் நம் அறிவிற்கு தெரிந்த போதிலும் நாம் இன்பத் தையே நாடுகிறோம். இதற்கு முடிவு தான் என்ன? கடவுளை நினைத்து வழிபட்டால் அன்றி, ஆசைகளில் இருந்து விடுபட முடியாது. எல்லா இன்பங்களையும் அனுபவித்து விட்டு, இறுதியில் இறைவனை அடையலாம் என்றால் காலம் தான் கடந்து போகும். ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அதை இறக்கும் தருவாயிலும் நினைப்பான். இல்லறத்தில் உள்ளவன் குடும்பத்தை பற்றி நினைக்கிறான். துறவி கடவுளைப் பற்றி நினைக்கிறான். ஒருவனுக்கு அமைதியின்மையையும், ஒருவனுக்கு சுகத்தையும் தருவதற்கு கடவுள் என்ன ஓரவஞ்சனைக்காரரா? படைப்பில் எல்லாவற்றுக்கும் இடமுண்டு. மனிதன் நல்லவற்றை பார்க்க மறுக்கிறான். அழகையும், ஆரோக்கியத்தையும் பார்ப்பதில்லை. ருசியுள்ள உணவுப்பதார்த்தங்களை தன் முன்னே இருக்க அவற்றை உண்ணாமல் கவலையுடன் அமர்ந்திருக்கும் பசித்த மனிதனைப் போல் நடந்து கொள்கிறான். இது யாருடைய குற்றம்? கடவுளுடையதா? மனிதனுடையதா? நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தி மனநிம்மதியுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள்.
-ரமணர்
"உன்னை முதலில் திருத்திக் கொள் "
ஒரு மனிதன் தன் மனம், மொழி, மெய்களால் தம்மால் இயன்ற நன்மைகளைத் தான் சார்ந்திருக்கும் சமுதாயத்திற்குச் செய்ய கடமைப் பட்டவனாக இருக்கிறான். தனக்கு நன்மை செய்வதோடு பிறருக்கும் நன்மை செய்ய கடமைப்பட்டவனாகவே அவன் இருக்கிறான். மரணத்திற்கும், மறுபிறவிக்கும் இடைப்பட்ட காலம் நீண்டதாகவோ அல்லது குறைந்ததாகவோ இருக்கலாம். ஆனால் தெளிந்த ஞானம் உள்ள ஒருவன் இதனால் எந்த மாற்றமும் பெறுவதில்லை. முதலில் உன்னைத் திருத்திக் கொள். அப்படி ஒவ்வொருவரும் தானே திருந்துவதற்கு முற்பட்டால் சமுதாயம் தானே திருந்திவிடும். மனிதன் சமயநம்பிக்கை கொண்டவனாக இருத்தல் அவசியம். சமயநம்பிக்கை இல்லாத மனிதன் வாழ்வில் ஒழுக்கத்தை இழந்து விடுவான். மனிதன் நல்லவனாக வாழ சமயமே வழிவகை செய்கிறது. அமைதியான தூய நிலையில் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் நற்செயல்களாகும். கலங்கிய மனத்தால் ஆசை வயப்பட்டு செய்யும் அனைத்து செயல்களும் தீமை தருவதாகும். இறைவனின் கட்டளையன்றி எதுவுமே நடப்பதில்லை. இந்த வாழ்வில் ஒருவனுடைய நடத்தைகள் அனைத்துமே அவனுடைய முற்பிறப்பின் வினைப்பயன்களாலேயே நிர்ணயிக்கப்படுகின்றன.

"அளவான விரதம் போதும்"
சாத்வீகமான உணவை மிதமாகச் சாப்பிடுவது நல்லது. மிளகாய், அதிகஉப்பு, வெங்காயம் போன்ற உணவுவகைகள் ஜீரண கருவிகளை எரிச்சல்படுத்துகின்றன. மூளையை மந்தமாக்குகின்றன. கீழான உணர்வுகளை உண்டுபண்ணுகின்றன. தூக்கத்தை அதிகப்படுத்துகின்றன.
* தேவையான அளவை விட சற்று குறைவாக உண்பது எப்போதும் நல்லது. ரொட்டி, பழம், காய்கறிகள், பால் போன்ற சாத்வீக உணவுவகைகள் நம் எண்ணங்களை சீர்படுத்தும் ஆற்றல் கொண்டவை. இவ்வுணவால் உடல் வலிமை குறைந்து விடுமே என்று அஞ்ச வேண்டியதில்லை. அசைவத்தை விட வேண்டும். உள்ளத்தின் பக்குவநிலைக்கேற்ப உணவு வகைகளை மாற்ற வேண்டும்.
* உள்ளமும் உடலும் ஒன்றை ஒன்று சார்ந்தவைகளே. அதனால், உள்ளம் சாத்வீக எண்ணங்களை நாட வேண்டும் என்று எண்ணினால் உணவிலும் சாத்வீகத்தை கைகொள்வது மிகவும் அவசியம். விரதம், பட்டினி போன்றவைகளால் உணவின் மீது கொள்கின்ற பற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும். ஆனால், பட்டினி என்பது மட்டுமே ஆன்மிக சாதனம் ஆகாது. உடல் வலிமை குன்றும்படியாக விரதம் மேற்கொள்ளக்கூடாது. அளவான விரதம், மிதமான உணவோடு, அமைதியான சிந்தனை இருந்தாலே ஆன்மிகம் கைகூடி விடும்.
-ரமணர்

 

Thursday, 24 October 2013

புலம்புவதால் பயனில்லை!!!

* உள்ளபடி உள்ள இடத்தில் உள்ளவாறு உணர்ந்து அடங்கி இருப்பதே உண்மையான சித்தியாகும். மற்ற சித்திநிலைகள் எல்லாம் வெறும் கனவேயாகும்.
* ஒருவன் எவ்வளவு பாவியாக இருந்தாலும், ""நான் பாவியாக இருக்கிறேனே! எப்படி கடைத்தேறப் போகிறேன்!'' என்று அழுது கொண்டிருப்பதனால் பயன் சிறிதும் இல்லை.
* வெறும் வருத்தத்தினாலும், புலம்பலினாலும் நேரத்தை வீணாக்காமல் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து ஊக்கத்தோடு நம் கடமைகளைச் செய்தால் நிச்சயம் உருப்படலாம்.
* மனங்களில் நல்லமனம் என்றும், கெட்டமனம் என்றும் இருவேறு மனங்கள் இல்லை . மனம் என்பது ஒன்று தான் இருக்கிறது.
* நாம் அனுபவிக்கும் இன்பத்தை அறியாமையால் புறவுலகத்தில் இருந்து பெறுவதாக எண்ணுகிறோம். ஆனால், உண்மையில் இன்பம் நமக்குள்ளே தான் இருக்கிறது.
* கடவுளின் பேரால் எவ்வளவு பாரத்தைக் கொடுத்தாலும் அவ்வளவையும் அவரே ஏற்றுக்கொள்வார். ஆனால், நாம் நம் மனதில் சுமைகளை சுமப்பதால் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கிறோம்.
* உழைப்பும் சமூகசேவையும் உலகத்திற்கு நன்மை செய்வனவாகும். உழைப்பின் மீதும், நம்மால் முடிந்த சேவைகளையும், பிறருக்கு உதவி செய்வதையும் உங்கள் அடிப்படைக் கடமையாகக் கொள்ளுங்கள்.
-ரமணர்
"மவுனமே பூரண ஞானம்
"
ராமரும், லட்சுமணரும் சீதையும் தாண்டகாரண்யத்தில் தங்கியிருந்த போது, ஒரு ஆஸ்ரமத்திலிருந்து மற்றொரு ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அப்படி கிளம்பும்போது, ராமனின் வயதில் ஒத்த சில இளைஞர்களும் அவர்களுடன் கிளம்பிவிட்டார்கள். இப்படி ராமர் தொடர்ந்து சொல்லும் போது கூடவே பல ரிஷிகுமாரர்களும் தோற்றத்தில் மரவுரி தரித்து ராமலட்சுமணர்களைப் போலவே தோற்றம் அளித்தனர். தொடர்ந்து காட்டுவழியில் செல்லும் போது சில பெண்கள் ராமசீதா வருகையை அறிந்தனர். ராமலட்சுமணர் மற்றும் சீதையைப் பார்க்கும் ஆவலில் ஓடிவந்தவர்களுக்கு ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. சீதையை மட்டுமே அப்பெண்களால் அடையாளம் காணமுடிந்தது. பெண்கள் சீதையை சூழ்ந்து கொண்டு நின்று ஒவ்வொரு இளைஞராக ""இவர் ராமரா அல்லது இவர் ராமரா''? என்று கேள்வி கேட்டனர். ஒவ்வொரு இளைஞரையும் கண்ட சீதை "இவர் ராமர் இல்லை, இவர் ராமர் இல்லை' என்று பதில் சொல்லிக்கொண்டிருந்தாள். கடைசியாக லட்சுமணரை காட்டி, இவர் ராமரா என்று அப்பெண்கள் கேட்டனர். சீதை அதற்கும் இல்லை என்று மறுத்தாள். கடைசியாக ராமரையே சுட்டிக்காட்டி கேட்டபோது மவுனம் சாதித்தாள் சீதை. மவுனம் சம்மதம் அல்லவா?
பக்தனுக்கும் இது தான். கடவுளைக் காணும் வரை அவரைப் பற்றிய கேள்விகள் எழும். பரம்பொருளை தரிசித்தபின் பேசத் தோன்றாமல் மவுனம் வந்துவிடும். மவுனம் என்பது முழுமை. அதுவே பூரண ஞானம் ஆகும்.
ரமணர்

Wednesday, 2 October 2013

பகவான் ரமணர்......

 
அவன் ஒரு சிறுவன். அவனது பெயரும் வேங்கடராமன் தான். பகவானின் பரம பக்தையான அவனது பாட்டி எச்சம்மாள் வைத்த பெயர் அது. ஒரு வயதிலேயே தாயை இழந்த அவனை எச்சம்மாதான் வளர்த்தாள். சிறுவயதிலேயே ஆச்ரமச் சூழலில் வளர்ந்தான் அவன். தினந்தோறும் காலையும், மாலையும் ஆச்ரமம் வந்து சேவித்துச் செல்வாள் பாட்டி. உடன் சிறுவனையும் அழைத்து வருவாள்.
அவனுக்கு 10 வயது நடந்து கொண்டிருந்தது. ஒருநாள் கார்த்தீகை தீப தினம். அன்று ரமணரின் அனுமதியும் ஆசியும் பெற்று அண்ணாமலையார் ஆலயத்திற்குச் சென்றான். அன்று அவனது தாத்தாவின் திதி தினம் வேறு. அதனால் சிவகங்கைக் குளத்தில் முழுகிக் குளித்து பின்னர் ஈசனைத் தரிசிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவன், குளத்திற்குக் குளிக்கச் சென்றான். குளக்கரையில் யாருமில்லை. பாசி படர்ந்த அந்தக் குளத்தில் மிக ஜாக்கிரதையாகக் கால் வைத்து இறங்கினான். இரண்டு படிகள் இறங்கி இருப்பான். அப்படியே பாசியில் கால் வழுக்கி விழுந்தான். நீரில் மூழ்க ஆரம்பித்தான். நீச்சலும் தெரியாது என்பதால் பயத்தால் அலறினான். கதறினான். யாரையாவது துணைக்கு வருமாறு கத்தினான். ஆனால் மூழ்கிக் கொண்டிருந்த அவன் குரல் யார் காதிலும் கேட்கவேயில்லை.
உடல் கீழே செல்ல ஆரம்பித்தது. சிறுவன் போராடி மேலே வர முயற்சி செய்தான். இயலவில்லை. எங்கும் கருமை சூழ்ந்தது. அப்போது ’திடீர்’ என்று தலையைச் சுற்றி ஒரு வெளிச்சம் தெரிந்தது. அதில் பகவான் ரமணரின் அருள் பொங்கும் முகம் தெரிந்தது. உடனே அந்த உருவம் மறைந்தது. அவ்வளவுதான். தண்ணீரை அதிகம் குடித்த அந்தச் சிறுவன் மெள்ள மெள்ள மயங்க ஆரம்பித்தான். யாரோ அவனது காலைப் பிடிப்பது போலிருந்தது. ஒளி தோன்றி மீண்டும் அதில் பகவான் ரமணரின் முகம் தெரிந்தது. அந்தப் பையன் மூர்ச்சையாகிப் போனான்.
அவனுக்கு நினைவு திரும்பியபோது சிவகங்கைக் குளத்தின் படிக்கட்டில் படுத்திருந்தான். உடலிலிருந்து தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. தண்ணீரில் மூழ்கிப் போன தான் எப்படி மீண்டு வந்தோம் என்பது தெரியாமல் திகைத்தான். தன்னைச் சுற்றி நின்று கொண்டிருந்தவர்களிடம் தன்னைக் காப்பாற்றியது யார் என்று கேட்டான்.
அங்கிருந்த ஒருவர், “கம்பத்து இளையனாரைச் சுற்றி வந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென குளத்துப் பக்கம் ஓடினார். அப்படியே தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் உன்னைக் கரையேற்றி இங்கே கிடத்தி விட்டு கோயிலுக்குள் வேகமாகப் போய் விட்டார். அவர் யார் என்பது தெரியவில்லை” என்றார்.
சிறுவன் ஆலயத்திற்குள் சென்றான். தன்னைக் காப்பாற்றியவர் அடையாளம் காண்கிறாரா, அவரிடம் நன்றி சொல்லலாம் என்று தேடிப் பார்த்தான். யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை. அண்ணாமலையாரைத் தரிசித்தான். பின்னர் வீட்டுக்குச் சென்றான். சொன்னால் திட்டுவார்கள் என்பதால் தனக்கு நேர்ந்த விஷயத்தை வீட்டில் அவன் யாரிடமும் சொல்லவில்லை.
மறுநாள் பாட்டி எச்சம்மாளுடன் ரமணாச்ரமம் சென்றான்.
இருவரும் பகவானை தரிசித்தனர். அப்போது பகவான் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனை நோக்கி “ ஆமாம். சிவகங்கைக் குளம் எவ்வளவு ஆழம் இருக்கும்?” என்று கேட்டார்.
பகவான் அப்படிக் கேட்டதும் அந்தச் சிறுவன் திகைத்துப் போனான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. (அந்த வயதில் அது அவனுக்குப் புரியவில்லை) பயந்து போய் அந்த இடத்தை விட்டு வெளியே ஓடி விட்டான்.
பிற்காலத்தில் கே.வி.மாமா என்று பிற பக்தர்களால் அழைக்கப்பட்ட கே.வேங்கடராமனுக்கு, வளர்ந்து இளைஞனான பின் தான் அந்தச் சொல்லின் பொருள் புரிந்தது. தன்னைக் காப்பாற்றியது முக்காலமும் உணர்ந்த பகவானன்றி வேறு யாராக இருக்கும் என்று உணர்ந்தவர், அவரைப் போற்றி வணங்கினார்.
“சித்திகள் சாதனைக்குத் தடை” என்று கூறியவர் பகவான் ரமணர். சாதகர்கள் சித்திகளிலேயே மனம் லயித்து வீழ்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் அவ்வாறு கூறினாரே தவிர, சித்திகளை இழித்துரைப்பதற்காக அல்ல. என்றாலும் பக்தர்களைக் காப்பதற்காக அவர் சித்தி பற்றிய தனது விதியை பலவிதங்களில் தளர்த்திக் கொண்டார் என்றே சொல்லலாம். பலருக்கு பல ரூபங்களில் அருணாசல ரமணர் அருள் புரிந்திருக்கிறார். ஆனால் அவற்றை அவர் எப்போதும் வெளிச் சொன்னதில்லை. பக்தர்கள் அதுபற்றி ஏதாவது பேசினாலும் கூட ‘ஓஹோ, அப்படியா’ என்பது போல கேட்டுக் கொண்டிருப்பாரே தவிர, அவற்றைச் செய்தது தான் தான் என்று அவர் ஒருபோதும் சொன்னதில்லை. சமயங்களில் ‘ஏதோ ஒரு சக்தி அப்படிச் செய்திருக்கலாம்’ என்று சொல்லி மழுப்பி விடுவார்.
அவர் தான் ரமணர்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

”மகாத்மாவும் மகா ஆத்மாவும்”

பகவான் ரமணர், மகாத்மா காந்தி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காந்தி திருவண்ணாமலை வந்திருந்தபோது ரமண மஹர்ஷியை தரிசிக்க எண்ணியிருந்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போனது. மூன்று முறை காந்தி ரமணரை தரிசிக்க முயற்சி செய்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.
1948ல் மகாத்மா மறைந்தார் என்ற செய்தி நாடு முழுதும் துக்கத்தை ஏற்படுத்தியது. வானொலிகளில் தொடர்ந்து பஜனை, பிரார்த்தனைப் பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. அதைக் கேட்ட பகவான், “ தன் வாழ்நாள் முழுவதும் பிரார்த்தனை செய்தவருக்கு மக்களுடைய பிரார்த்தனை இது” என்றார் தழுதழுத்த குரலில்.
பகவான் காலை நடைக்காக வெளியே செல்லும் போது ஒரு பத்திரிகை நிருபர், காந்திஜியின் மறைவு பற்றி பகவானின் கருத்தைக் கேட்டார். அதற்கு பகவான் மிகவும் உணர்ச்சி மிக்க குரலில், “மகாத்மா காந்தியின் மறைவுக்காக ஒவ்வொரு மனிதனின் இதயமும் துக்கப்படுகிறது. துக்கப்படாமல் யார் இருக்கிறார்கள், யாரால் இருக்க முடியும்?” என்றார்.
அவர் உலா முடித்து திரும்பி வரும்போது, காந்திஜிக்கு மிகவும் பிடித்த “வைஷ்ணவ ஜனதோ” பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கேட்ட பகவானின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மாலை 5 மணிக்கு ஆச்ரமத்தில் காந்திஜிக்காக சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு நடைபெற்றது. பகவானும் அதில் கலந்து கொண்டார்.
மறுநாள் காந்தியின் மரணம் பற்றி பக்தர் ஒருவரிடம் “ ம்ம். சுயராஜ்யம் கிடைத்து விட்டது. நீங்கள் வந்த வேலை முடிந்து விட்டது. ஏன் இன்னும் இருக்கிறீர்கள்? போக வேண்டாமா? ஏற்கனவே தாமதமாகி விட்டது என்பது போல காந்தி அனுப்பப்பட்டு விட்டார்” என்றார் சோகத்துடன்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!


அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம்

.ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே அடியவர் ஒருவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்

லட்சுமி என்கிற பசு....

ஆஸ்ரமத்தில் லட்சுமி என்ற பசு இருந்தது. அது 6 மாதக் கன்றுக் குட்டியாக இருக்கும் போது ரமணரிடம் வந்தது. 1924 முதல் 1948 வரை அவருடன் வாழ்ந்தது. ஒரு நாள் அது நோய்வாய்ப்பட்டு படுத்து விட்டது. ரமணர் மாட்டுப் பட்டிக்குச் சென்று லட்சுமிக்கு அருகில் அமர்ந்து தம் மடியில் அதன் தலையை எடுத்து வைத்துக் கொண்டார்.
தம்மை அடைந்த பசுவையும் முக்தியடையச் செய்யும் பெருங்கருணை படைத்த ரமணரின் மடியில் உயிரைவிடும் பாக்கியம் அப் பசுவுக்குக் கிடைத்தது.
“லட்சுமியம்மா ! லட்சுமியம்மா !” என்று சொல்லி தம் திருக் கரத்தால் அதன் தலையைத் தடவிக் கொடுத்தார். லட்சுமியின் உயிர் பிரிந்தவுடன், சடலத்தை நன்னீரால் குளிப்பாட்டி, மஞ்சள்பூசி, நெற்றியிலே குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டுத்துணி கட்டி, தூபதீபம் காட்டி, சமாதி செய்தார்கள். கடைசிவரை ரமணர் அருகே இருந்தார். இன்றும்கூட லட்சுமியில் சமாதியில் பகவான் ரமணர் அதன் மீது பாடிய இரங்கற்பாவை நாம் காணலாம்.

ஒரு சமயம் ஆஸ்ரமத்திலே விசேஷ பூஜைகள் நடந்தபோது சாப்பாட்டுக்கு வேண்டிய ஏற்பாடுகள் நடந்தன. கூட்டம் மிக அதிகமாக இருந்ததால் ஆஸ்ரம நிர்வாகி கோபம் அடைந்து ஏழைப் பரதேசிகளைப் பார்த்து, “பரதேசிகள் உள்ளே வரவேண்டாம். சற்று நேரம் பொறுத்துப் பின்பு வரலாம்” என்று கடுமையாகச் சொன்னார். மற்றவர்கள் சாப்பிட அமர்ந்தார்கள். அனைவருக்கும் இலை போடப்பட்டது. வழக்கமான இடத்தில் ரமணர் இல்லை. பகவான் எங்கே ? எல்லாரும் தேடினார்கள். பகவானைக் காணவில்லை.
அவர் தொலைவில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஆஸ்ரம நிர்வாகஸ்தர்கள், “பகவான் ஏன் இங்கு வந்து விட்டீர்கள்? சாப்பிட எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கேட்டார்கள்.
அதற்கு ரமணர், “பரதேசிகள் உள்ளே வர வேண்டாம் என்று சொன்னார்கள். நானும் ஒரு பரதேசி தானே?” என்றார். ஆஸ்ரமவாசிகள் தங்கள் தவறை உணர்ந்து அனைவரையும் ஒரே நேரத்தில் அமர்த்தி சமாராதனை செய்தார்கள்.

ஒரு நாள் பகவான் மூங்கில் கொடியில் உலர்த்தியிருந்த தம் துண்டை எடுக்கும்போது அங்குக் கட்டப்பட்டிருந்த குருவிக்கூடு அசைந்து அதில் இருந்து ஒரு முட்டை கீழே விழுந்து விட்டது. விரிசல் விட்டது.  பகவான் மிகுந்த வருத்தமடைந்தார்.
ஒரு துணியினால் விரிசலடைந்த முட்டையைச் சுற்றி மீண்டும் கூட்டுக்குள் வைத்தார். “ஐயோ, பாவம் ! இதன் தாய் எவ்வளவு வருத்தமடையும் !”
“இதன் தாய்க்கு என் மீது எவ்வளவு கோபம் உண்டாகும்?”
“இந்த விரிசல் கூட வேண்டும்” என்றார்.
மூன்று மணி நேரங்களுக்கு ஒருமுறை முட்டையை எடுத்துத் துணியை நீக்கிப் பார்ப்பார். முட்டையைத் தம் உள்ளங்கையில் வைத்துக் கொள்வார். அதன்மீது தம் கருணைப் பார்வையை செலுத்துவார். பிறகுக் கூட்டில் வைப்பார். இப்படி ஒரு வாரம் கழிந்தது.
குருவி அடைகாத்ததோ இல்லையோ பகவான் அதைவிட அன்புடன் அந்த முட்டையைப் பாதுகாத்தார். தம் திருக்கண் பார்வையினால் கவசமிட்டுக் காப்பாற்றினார். ஏழாவது நாள் விரிசல் மூடிக்கொண்டு விட்டது !
பகவானுக்குப் பரம சந்தோஷம். பரம திருப்தி.
சில நாட்கள் சென்றன. அந்த முட்டையில் இருந்து சின்னஞ்சிறு குஞ்சு வெளி வந்தது. பகவானுக்கு மேலும் சந்தோஷம் ! அந்தக் குஞ்சைத் தம் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சினார். தடவிக் கொடுத்தார்.
தாமே முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தவரைப் போல ஆனந்தமடைந்தார். அந்தக் குருவிக் குஞ்சு செய்த புண்ணியம் தான் எத்தகையது?  பறவைக் குலத்துக்கும் கருணை காட்டிய முனிவரின் அன்பை எண்ணி வியந்தனர் அன்பர்கள்.

Thursday, 19 September 2013

வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு!!!

* முற்பிறவியில் புண்ணிய வினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.
"அகந்தை அகலட்டும்"


* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் கிடைக்கின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது.
* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து
விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.
- ரமணர்

Wednesday, 11 September 2013

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

                                                            
                                                                  பகவான் ரமணர்
1.         மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
2.         சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
3.         கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
4.         கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
5.         தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
6.         மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
7.         குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
8.         தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
9.         உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
10.       மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
11.       ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God. 
 
 

Tuesday, 10 September 2013

சும்மா இருப்பது சிரமம்!!!

* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.
* கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
* அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
* நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
* மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.
* அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.
- ரமணர்
"பிராயச்சித்தம் சொல்லட்டுமா "


*சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.
- ரமணர்

Wednesday, 17 July 2013

இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம்!!!

*ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம்.
-ரமணர்

Thursday, 11 July 2013



* "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.
* "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.
* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.
* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.
- ரமணர்

Thursday, 4 July 2013

பகவான் ரமணரின் அருள் விருந்து!!!


எல்லாம் கடவுள் செயல்

அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்..

Friday, 28 June 2013

நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"



அது 1906 ஆம் ஆண்டு.
இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரிஎன்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகைசன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தநேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.
அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.

Thursday, 30 May 2013

Sri Ramana Maharshi on Suffering and Grief

One of the problems about which Bhagavan Sri Ramana Maharshi (B) was often asked was suffering. The questions were usually personal rather than academic, since it was often the experience of grief which drove people to seek solace from him. The real solace came as a silent influence, but he did also answer theoretical questions. The usual answer was to bid the questioner find out who it is that suffers, just as he would bid the doubter find who it is that doubts; for the Self is beyond suffering as it is beyond doubt. Sometimes, however, on a more contingent level, he would point out that whatever makes a person dissatisfied with his state of ignorance and turns him to the quest of the Self is beneficial and that it is often suffering which is the means of doing this.
B.: The Bliss of Self is always yours and you will find it if you seek it earnestly. The cause of your misery is not in your outer life; it is in you, as your ego. You impose limitations on yourself and then make a vain struggle to transcend them. All unhappiness is due to the ego. With it comes all your trouble. What does it avail you to attribute the cause of misery to the happenings of life when that cause is really within you? What happiness can you get from things extraneous to yourself? When you get it, how long will it last?
If you would deny the ego and scorch it by ignoring it, you would be free. If you accept it, it will impose limitations on you and throw you into a vain struggle to transcend them. That was how the 'thief' sought to ruin King Janaka.

To be the Self that you really are is the only means to realise the Bliss that is ever yours.
A very devoted and simple devotee had lost his only son, a child of three. The next day he arrived at the Asramam with his family. Referring to them Bhagavan said: "Training of mind helps one to bear sorrows and bereavements with courage; but the loss of one's children is said to be the worst of all griefs. Grief only exists as long as one considers oneself to have a definite form; if the form is transcended, one knows the One Self to be eternal. There is neither death nor birth. What is born is only the body and this is the creation of the ego. But the ego is not ordinarily perceived without the body and so is identified with it. It is thought that matters. Let the sensible man consider whether he knew his body while in deep sleep. Why, then, does he feel it in the waking state? Although the body was not felt in sleep, did not the Self exist? What was his state when in deep sleep and what is it now when awake? What is the difference? The ego rises up and that is waking.
  Simultaneously thoughts arise. Find out who has the thoughts. Where do they come from? They must arise from the conscious self. Apprehending this even vaguely helps towards the extinction of the ego. The realisation of the One Infinite Existence becomes possible. In that state there are no individuals but only Eternal Being. Hence there is no thought of death or grieving.
"If a man thinks that he is born he cannot escape the fear of death. Let him find out whether he was ever born or whether the Self takes birth. He will discover that the Self always exists and that the body which is born resolves itself into thought, and that the emergence of thought is the root of all mischief. Find where thought comes from, and then you will abide in the ever-present inmost Self and be free from the idea of birth and fear of death."
D.: If some one we love dies, it causes grief. Should we avoid such grief by either loving all alike or not loving at all?
B.: If someone we love dies, it causes grief to the one who continues living. The way to get rid of grief is not to continue living. Kill the griever, and who will then remain to grieve? The ego must die. That is the only way. The two alternatives you suggest amount to the same. When all are realised to be the one Self, who is there to love or hate?
Source: Teachings of Sri Ramana Maharshi in his own words by Arthur Osborne, Chapter Two, section Suffering

Wednesday, 29 May 2013

நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"



அது 1906 ஆம் ஆண்டு.
இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரிஎன்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகைசன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தநேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.
அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.
வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.

Thursday, 23 May 2013

”பகவானும் வெளிநாட்டு பக்தரும்”

ரமணாச்ரமம்.
முற்பகல் நேரம்.
ஹாலின் உள்ளே வெயிலின் தாக்கம் அதிகமிருந்ததால் பகவான் வெளியே உள்ள மரத்தடியில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுற்றி பக்தர்கள் அமர்ந்திருந்தனர். பகவான் உபதேச சாரத்திலிருந்து சில பாடல்களைக் கூறி அதன் பொருளை விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒரு வெளிநாட்டு பக்தர் ஒருவர் வந்தார். எல்லோரும் கீழே அமர்ந்திருந்ததைப் பார்த்த அவரும் கீழே அமர முயற்சித்தார். அவருக்கு அப்படி அமர்ந்து பழக்கமில்லாததால் முடியவில்லை. அதனால் சற்று தூரத்தில் போடப்பட்டிருந்த ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு வந்து அதில் அமர்ந்தார். பகவான் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்.
”உபதேசிக்கும் குரு மேலே இருக்க சீடர்கள் கீழே அமர வேண்டும். அதுதான் நியதி. அது தெரியாத இந்த வெள்ளைக்காரர் பகவானுக்குச் சரிசமமாக நாற்காலியில் அமர்ந்திருக்கிறாரே, இது என்ன நியாயம்?” சீடர் ஒருவர் மற்றொரு சீடரிடம் முணுமுணுத்தார். மேலும் பல சீடர்களுக்கும் அதுவே எண்ணமாக இருந்தது. அவர்களில் ஒருவர் எழுந்து வெள்ளைக்காரரிடம் சென்றார்.
“நீங்கள் இதில் உட்காரக் கூடாது. கீழே தான் உட்கார வேண்டும்” என்றார்.
“ஐயா, நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் என்னால் உங்களைப் போல் காலை மடக்கிக் கீழே உட்கார முடியவில்லை. எனக்கு அது பழக்கமுமில்லை” என்றார் அந்த வெளிநாட்டவர் ஆங்கிலத்தில்.
“எங்கள் குருவுக்குச் சமமாக நீங்களும் உட்கார்ந்திருப்பது எங்கள் குருவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. எல்லா சீடர்களும் இதையே நினைக்கிறார்கள்” 
“ஓ.. சரி, என்னால் கீழே அமரவும் முடியாது. இப்படி நாற்காலியில் அமர்ந்தால் உங்களுக்கும் கஷ்டம். அதனால் நான் சென்று விடுகிறேன்” என்று சொல்லி விட்டு எழுந்து மெள்ள வெளியே நடக்க ஆரம்பித்தார்.
இதை கவனித்துக் கொண்டிருந்த ரமணர், அந்த சீடரிடம், ”என்ன ஆச்சு, ஏன் வந்தவர் உடனே வெளியே போகிறார்?” என்று கேட்டார்.
உடனே அந்தச் சீடர், “பகவான். அவரால கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அப்படியெல்லாம் இங்க உட்கார்றது முறையில்ல. அது பகவானை அவமானப்படுத்தறமாதிரின்னு சொன்னேன். அவரும் சரின்னுட்டு போயிட்டார்” என்றார்.
உடனே பகவான் ரமணர், “ஓஹோஹோ, குரு மட்டும் தான் உசந்த ஆசனத்துல உட்காரணுமா? சரிதான். இதோ இந்த மரத்து மேலே ஒரு குரங்கு உட்கார்ந்திண்டு இருக்கு. அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு. அதை என்ன பண்ணுவ? அதையும் வெளியில அனுப்படுவியா நீ? என்றார்.
bahavan with monkey
சீடர் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பகவானையே பார்த்துக் கொண்டிருந்தார்.
பகவான் உடனே, “இதோ பார், இந்த உலகத்துல யாரும் உசத்தியும் இல்லே! யாரும் தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிட்டு அங்க உட்கார வைங்கோ.” என்றார் சற்றுக் கடுமையாக.
சீடர்களும் அந்த வெளிநாட்டவரை அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தனர்.
பகவானின் உபதேச விளக்கம் தொடர்ந்தது.
அது பக்தரோ, பித்தரோ, மனிதனோ, விலங்கோ, பறவையோ எல்லாவற்றையும் ஒன்றாகவே பார்த்த, சமமாகவே கருதிய – சக ஆத்மாகவே நடத்திய – ஒப்புயர்வற்ற ஞானி பகவான் ரமண மஹரிஷி.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!

Muruganar, Sri Guru Ramana Prasadam, translated by Robert Butler

Mind, cultivate the qualities of concentration and mindfulness so that, illuminated by the intense light of devotion to your guru, you root out the confusion of 'I' and 'mine' even as it arises, and experience the clarity which comes from the untroubled peace of jnana. (v 470)

Mind, heed the profound truth of this teaching, for it is the first duty of all seekers: this is meditation, the yoga of union with the supreme, that disciplines the mind so that all sense of doership is abolished. (v 471)

My soul, why do you labour in the senses' barren tracts, when there is such bliss to be had from tending the fertile fields of the heart where grows the rich crop of Sri Ramana's glorious feet? (v 476)

When we mistake that which is impermanent for that which is enduring, it only serves to emphasize the disharmony within our hearts. The true temperament is one that cleaves to the indestructible Self dwelling at the heart of our very existence as the immovable reality. (v 477)

Unless the mind subsides into the heart, whose nature is consciousness, and experiences the deep peace of union with it, the mind, through separation from it, will fall into the trap of the sense organs, be whirled about in the world of the senses, and become scattered. (v 487)

True nobility can be found at the feet of those great ones in whom there is no separation from the all-transcending radiance of their own true Self and who, even in the other states [of waking, dream and sleep], remain in the fully awakened state where realisation's light is always present. (v 488)

~

Thursday, 16 May 2013

"சிவனின் தட்சிணாமூர்த்தி கோலம்'


பேசாமலே மாணிக்கவாசகருக்கு முக்தி நிலைக்கான பாதை காட்டிய தெய்வம் யார் என்றால் "சிவனின் தட்சிணாமூர்த்தி கோலம்' என்போம். அந்த தட்சிணாமூர்த்தியே நம் மத்தியில் சமீபகாலத்தில் வாழ்ந்து விட்டும் சென்றிருக்கிறார். இதோ! அந்த அதிசயம்!
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராகாவாச்சாரியார் என்ற பக்தர், ஆஸ்ரமத்தில் இருந்த ரமணரைப் பார்க்க வந்தார். அவர் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்.
பகவத்கீதை அவரது கையில் இருக்கும். யாருமில்லாத போது, ரமணரிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்பது அவரது விருப்பம்.
அவர் ரமணரை நெருங்கவும், ஏற்கனவே அவருடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் புறப்பட்டு விட்டனர்.
""ஆஹா...எதிர்பார்த்து வந்த தனிமைச்சூழல் கிடைத்து விட்டதே!'' என்று ஆவலுடன் அவர் அருகே நெருங்கியவுடன், ""நீங்கள் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவர் என்பது உங்கள் கையிலுள்ள கீதையைப் பார்த்தாலே புரிகிறது. கேளுங்கள், உங்களுக்கு என்ன வேண்டும்?''என்றார்.
""உங்களது உண்மையான வடிவத்தை தரிசிக்க எனக்கு ஆசை, காட்டுவீர்களா?'' என்ற ராகவாச்சாரியார்
கண்முன் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ரமணரின் பின்னால் தோன்றிய ஒளிவட்டத்தில், தட்சிணாமூர்த்தி வடிவம் தெரிந்தது. மவுனமாக இருக்க வேண்டும் என்பதை அதிகமாக வலியுறுத்தியவர் ரமணர்.
ராகவாச்சாரியாருக்கு இதன் மூலம் ஒரு விஷயம் தெளிவானது. தட்சிணாமூர்த்தியும் அமைதியே வடிவாக சின்முத்திரை காட்டி, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றை விடுத்து, தன்னைச் சரணடைவோருக்கு முக்திநிலை அருள்கிறார். இதையே ரமணர் தன்னிடம் பேசாமல் பேசிவிட்டதாக உணர்ந்தார்.

Saturday, 27 April 2013

Sivaprakasam Pillai


Sivaprakasam Pillai photo

(1875 - 1948)
M. Sivaprakasam Pillai, a philosophy graduate and a Revenue Department officer, first came to Sri Ramana in 1901. Sri Ramana (known then as Brahmana Swami) was 21 years old and was living in a cave on Arunachala. Humbly, Sivaprakasam Pillai began to ask Sri Ramana questions about how one was to discover one's true identity. In those days Sri Ramana rarely spoke. His responses to Sivaprakasam Pillai's questions were written with his finger in the sandy soil, or on slips of paper, or on a slate that Sivaprakasam Pillai brought along.
Many of these questions and answers Sivaprakasam Pillai wrote out in a notebook. More than twenty years later, in 1923, devotees urged Sivaprakasam Pillai to publish them under the name Nan Yar? (Who Am I?).
Various versions of this exist, some in question and answer format, and some in essay format. The most authentic version is considered to be the essay version that Sri Ramana wrote a few years after the publication of the first version.
Sivaprakasam also wrote poems about his experiences with Sri Ramana and about Sri Ramana's teachings. Several of these poems became part of the daily parayana and were regularly recited in Sri Ramana's presence.
Sivaprakasam Pillai resigned from his job in 1910 in order to devote his full attention to his sadhana. He moved back to his native village Idayanpalchori and came at intervals to Arunachala for Sri Ramana's darshan.
Upon hearing of Sri Pillai’s death, Bhagavan said, “Sivaprakasam Pillai Sivaprakasamaanaar.” (Sivaprakasam Pillai has become the Light of Siva.)


Wednesday, 24 April 2013

பிராயச்சித்தம் சொல்லட்டுமா!


  1. சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
  2. புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
  3. கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
  4. இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.
  5. "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.

Wednesday, 17 April 2013

பகவான் ரமண மகரிஷி.


ஒரு மான் மீது அதீத பாசம் வைத்திருந்தார். அங்கே குரங்கு, மயில் போன்றவை இருந்தாலும் மான் மீது தனிபாசம் அவருக்கு!
திருவண்ணாமலையில்உள்ள ரமணாஸ்ரமத்தில், அந்த மான் எப்போதும் அவருடனேயே இருக்கும். அதற்கு "வள்ளி' என பெயர் சூட்டியிருந்தார். அதற்கு உணவூட்டுவது, அன்புடன் தடவிக்கொடுப்பது எல்லாமே அவர் தான். வெளியில் போனால் கூட, ""போயிட்டு வரட்டுமா! சமர்த்தாக இரு!'' என்று சொல்லிவிட்டு தான் போவார்.
ஆஸ்ரமத்தில் இருந்தவர்கள் எல்லாம், ""ஆஹா..நாம் இந்த மானாய் பிறந்திருக்கக் கூடாதா! அவரது அன்புக் கரங்களால் தினமும் வருடுகிறாரே! அத்தகைய ஸ்பரிசத்தைப் பெறுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்கிறது இந்த மான்! இந்த ஸ்பரிசம் நமக்கு கிடைக்கவில்லையே,'' என ஏங்கியவர்கள் உண்டு.
அவர் என்ன கட்டளையிட்டாலும் அப்படியே கேட்கும் அந்தமான். அவர் வெளியே சென்றால், ஏக்கத்துடன் அவரைப் பார்க்கும். ஆனால், எல்லாருக்கும் முடிவு என்ற ஒன்று உண்டல்லவா! அந்தமானுக்கு ஒரு "கல்' ரூபத்தில் முடிவு வந்தது.
யாரோ ஒருவர் அதன் மீது கல்லை வீசி எறிந்து விட்டார். மானுக்கு கடுமையான காயம். டாக்டர்களை வரவழைத்தார் ரமணர்.
அவர்கள் சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் போனது. கடைசியில், அவரைக் கண் கொட்டாமல் தரிசனம் செய்தபடியே அது உயிரை விட்டது.
ரமணர் அதை புதைக்க ஏற்பாடு செய்தார். புதைக்கப்பட்ட இடத்தில் தன் அன்புமானுக்கு சமாதியும் கட்டினார்.
பக்தர்களின் அன்புக்கு மட்டுமல்ல! வாயில்லா ஜீவன்களின் அன்புக்கும் அடிமைப்பட்டிருந்தார் பகவான் ரமண மகரிஷி.

Wednesday, 10 April 2013

Palaniswami


Shortly after Sri Ramana's arrival at Gurumurtam a sadhu named Palaniswami first heard of Brahman Swami, as Sri Ramana was then known, and went to see him. Palaniswami's first darshan left him filled with peace and bliss, and from that time on his sole concern was serving Sri Ramana.
Palaniswami then joined Ramana as his permanent attendant providing him with a lifetime of care and protection. From Gurumurtam to Virupaksha Cave (1899-1916) to Skandasramam Cave (1916-1922) on the holy mountain Arunachala, he was the instrument of divine protection for Ramana. Ramana would be without consciousness of the body and lost in inner bliss most of the time and during those times protection was very valuable. Besides physical protection Palaniswami would beg for alms, cook and prepare meals for himself and Ramana, and care for him as needed.

Gurumurtham Gurumurtham
from Living with the Master, Reminiscences by Kunjuswami:
When Sri Bhagavan was in Gurumurtham, Palaniswami was regularly doing puja to the Ganesa idol at Ayyankulum and was leading the life of a sadhu. He was born in Vadavanur near Palghat. When he heard of the greatness of the Brahmanaswami he went and saw him. Sri Bhagavan was known as Brahmanaswami at that time. The moment he saw Sri Bhagavan, he was filled with peace and joy. He decided to serve Brahmanaswami. He was older than Brahmanaswami by thirty years. When he saw the austere lad with a shining face, Palaniswami felt like a father towards his son and looked after his with great care and affection. When he had to go out, he would lock the door of Gurumurtham and return as quickly as possible. Nobody was allowed to see the Swami without his permission. As Brahmaswami was seemingly doing intense tapas, perhaps this kind of protection was arranged by Arunachaleswara himself. After spending 1 1/2 years in Gurumurtham, Sri Bhagavan moved to Virupaksha Cave on the hill. Palaniswami also accompanied him there.
Palaniswami used to wear only a towel reaching his knees. He had only two towels. All the vessels he used were earthen vessels. There was not even a tumbler made of either brass or aluminium. The number of visitors increased at Virupaksha. When visitors asked for water, it was served in an earthen mug. At least for the sake of those who were disinclined to drink from an earthen tumbler, Palaniswami was asked on occasions to keep a couple of aluminium or brass tumblers. Some even offered to buy them. But he refused to accept their suggestion. He never accepted anything from others, and without fear or favour, he acted in a straightforward way. He spurned everything in the world except service to Sri Bhagavan.
When Sri Bhagavan was at Virupaksha Cave, some sadhus who had already established their Ashram on the hill feared that fewer people would visit them as more and more went to see Sri Bhagavan. They tried to give trouble to Sri Bhagavan in several ways. Thinking that the sadhus should not suffer in any way because of his presence, Sri Bhagavan decided to go and live in the forest.

Wednesday, 20 March 2013

பகவான் ரமணர்

1. மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
2. சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
4. கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
7. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
8. தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும்.

Friday, 15 March 2013

பகவான் ரமணரும் யோகர் சுவாமிகளும்

 
இலங்கை யாழ்பாணத்து யோகர்  சுவாமி அவர்கள்  ரமண ஆசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம். இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி? ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.
தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்

றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே
ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும். அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....

Thursday, 28 February 2013

ரமணாஞ்சலி


மஹர்ஷி ரமணர்
இன்று பகவான் ஸ்ரீ ரமணரின் ஆராதனை விழா. இன்றோடு அவர் பூத உடல் உகுத்து 62 வருடங்கள் ஆகின்றன. அவர் மறைந்தாலும் அவரது உயிர் சக்தி இன்னமும் எங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டுவதாகவும் நாம் எல்லோரும் நம்புகின்றோம். பகவான் ரமணரும் கூடத் தன் இறுதிக் காலங்களில், “ஏன் வருந்துகிறீர்கள்? நான் எங்கே போய் விடப் போகிறேன்? நீங்கள் எல்லோரும் நான் இறந்து போய் விடப் போகிறேன் என்று கூறுகிறீர்கள். ஆத்மாவுக்கு இறப்பு ஏது? முன்னை விட அதிகமாக என்னுடைய இயக்கம் இருக்கும்” என்று அடியார்களுக்கு ஆறுதல் கூறினார். இன்றும் அவரது ஆசிரமத்துக்கு உள்ளன்போடு செல்பவர்கள் அவரது உயிர்ப்பை உணர்கிறார்கள் என்பது தான் உண்மை.
இனி பகவான் ரமணர் வாழ்வில் நடந்த சுவையான சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் (அன்று)
அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம். ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ரூபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

ரமணாச்ரமம் (அன்று)
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே – ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.
உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.
இதைத் தான் வேதங்களும், உபநிஷதங்களும் “அதுவே நான்”, ”நானே அது” “அகம் பிரம்மாஸ்மி” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. ஆனால் பலர் இன்னும் தன்னைப் பற்றியும் ஆராயாமல், கடவுள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவுமில்லாமல் ஏதேதோ பிதற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர் ரமணர்
தன்னை ஒரு பெரிய அறிவாளியாகவும், ரமணரை வெறும் சோம்பேறியாகச் சும்மா உட்கார்ந்து பொழுது போக்குகிறவருமாக நினைத்த இளைஞன் ஒருவன் ஒருநாள் ரமணாச்ரமத்திற்கு வந்தான். அங்கே எல்லாரும்  ரமணர் திருவுரு முன் அமர்ந்து அமைதியான தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.
அந்த அமைதியைக் குலைத்து, தனது மேதாவிலாசத்தை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞன், சத்தமாக ரமணரை நோக்கி, ”’ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தரிடம் கடவுளைக் காண்பிக்க என்னால் முடியும்’ என்று சொன்னார். அது போல உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா?” என்று எகத்தாளமாகவும் கிண்டலாகவும் கேட்டான்.
அவனுக்கு ரமணரை எல்லோரது முன்னாலும் அவமானப்படுத்தி விட்டதாக ஒரு எண்ணம். கண்ணுக்கு முன்னால் கடவுள் என்ற மூலப் பிரகிருதியை நேருக்கு நேராகக் காண்பிக்க யாராலும் முடியாது என்ற எண்ணத்தால் மற்ற பக்தர்களும் பகவான் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று மிக்க ஆவலுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர்.

பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி
பகவான் மெல்ல, “கடவுளைக் காண்பிக்க வேண்டுமா? ஓ, தாராளமாகக் காண்பிக்கலாம். அது சரி கேட்பது யார் விவேகானந்தரா?” என்றார்.
அவ்வளவுதான். முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தான் அந்த இளைஞன். பகவானை அவமானப்படுத்த நினைத்த அவன், அவமானப்பட்டுப் போனான்.
ஆம். யாரும், யாரையும் விமர்சிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். ராமகிருஷ்ணரிடம் அதுவரை யாரும் கேட்காத – கடவுளைக் காண்பிக்க இயலுமா? – என்ற கேள்வியை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அவருக்கு அதற்கான தகுதியும், இறைவனைப் பற்றிய உண்மையான தேடலும், விழைவும் இருந்தது.
ஆனால், ரமணரிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞனுக்கு அது இல்லை. ரமண மஹரிஷியை கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவன் தான் அந்த இடத்தை விட்டு எழுந்து போனான்.
அந்த அரைகுறை அறிவு மேதாவி இளைஞனைப் போலத் தான் பலர் இறைவனைப் பற்றிய தேடலும், தன்னைப் பற்றிய உண்மையான அறிவும், அவ்வாறு அறிவதற்கான விழைவும் இல்லாமல், தன் தகுதிக்கு மீறி, தன்னால் எட்ட முடியாத நிலையில் உள்ள மகான்களை, ஞானியர்களை விமர்சித்தும், குறை கூறியும் வருகின்றனர்.
உண்மையிலேயே நமக்கு அந்தத் தகுதி உண்டா?

பகவான் ரமணர்
”’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது” என்றார் ரமணர். முதலின் தான், தான் என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமே விளங்கும் என்றும் அவர் சொன்னார்.
”பந்தத்தில் இருக்கும் நீ யார்?” என்ற கேள்வி கேட்டு, அதற்கான விடையை நீ அறிந்து கொண்டால், பின்னர் வேறு கேள்விகளே தோன்றாது. உனக்கு அந்நியமாய் ஏதும் இல்லை என்பதை நீயே உணர்வாய் என்றார்.
இந்த நன்னாளில் அதற்கான முயற்சிகள் மேன்மையுறட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!



 
ஸ்ரீ ரமணரின் சமாதி ஆலயத்தை முழுமையாகக் காண இங்கே சுட்டவும்.
ஸ்ரீ ரமணரைத் துதிக்கும், உள்ளத்தை உருக்கும் ரமண ஸ்துதி பஞ்சகப் பாடல்களை இங்கே கேட்கலாம்/பதிவிறக்கலாம்
பகவான் ரமணர் தனது பெரும் பகுதி வாழ்நாட்களைக் கழித்த ஸ்காந்தச்ரமத்தை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கச் சுட்ட வேண்டியது இங்கே
ஸர்வம் ஸ்ரீ ரமணார்ப்பனமஸ்து!!